Tags
அல்குஆன், அல்குரான், அல்லா, அல்லாஹ், கதை, குரஆண், குரங்கு, குரானின் தவறுகள், பரிணாமம், புனைவு, மடமை, மனிதன்
குரான் தவறு 4 –
மனிதனை குரங்காக மாற்றினோம் என்றது
எல்லா மதங்களும் எதில் ஒத்துப்போகிறதோ இல்லையோ, மனிதனுடைய பிறப்பில் மட்டும் ஒத்துப்போகின்றன. அந்த ஒத்துப்போகுதல் தன்மையானது, இறைவனே மனிதனை படைத்தான் என்பதாகும். இறைவன் மனிதனை படைத்தான் அதனால் அவனை நீ ஐந்து முறை தினமும் வணங்கு என்று சொல்லி மனிதனுடைய நேரத்தினை, செயல்திறனை ஆக்கப்பூர்வமாக அவன் வாழ வழிவகை செய்யாமல் வீணடிக்கும் போக்கு பரவலாக உள்ளது.
மனிதனை களிமண்ணை கொண்டு செய்ததாக குரானின் வசனத்தினை பார்த்தோம், பறவையை களிமண்ணால் செய்து உயிர் தந்தாக பொய்யுரைத்தமையையும் கண்டோம். அடுத்தாக ஜின் என்னும் சாத்தான்களை நெருப்பிலிருந்து படைத்ததாக கூறிய வசனத்தில் உள்ள உண்மை நிலையை கேள்விக்கு உட்படுத்தினோம். இப்படி மனித அறிவுக்கு தெரிந்த பல்வேறு அறிவியலுக்கு எதிராகவே குரான் உள்ளது. பகுத்தறிவுக்கு எதிராக பெரிய முட்டாள்தனத்தினை உலகில் பரப்பிக் கொண்டிருக்கும் குரானின் அடுத்த பெரும் குற்றத்தினை நாம் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு டார்வின் அவர்களின் பரிணாமக் கொள்கை தெரிந்திருக்கலாம். மனிதன் குரங்கிலிருந்து பரிணாமித்தான் என்பதே அந்த கோட்பாடு. தலைமுறை தலைமுறையாக மரபணுவழி எடுத்துச் செல்லும் பொழுது காலப்போக்கில் அவ்வுயிரினத்தின் தேவை, சூழல், தன்னேர்ச்சியான நிகழ்வுகள் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்கும் ஒன்று. உயிரினத்தின் படிப்படியான மாற்றங்கள், எதனால் எவ்வாறு மாறுபடுகின்றன என்று ஆய்ந்து அறிந்து கூறுகிறது இக்கொள்கை. மிகச் சுருக்கமாக சொன்னால் காலமாற்றத்திற்கு தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் உயிரானது வேறு ஒரு உயிராக மாற்றம் அடைவது பரிணாமம்.
அறிவியல் ரீதியாக முன்வைக்கப்படும் இந்த கொள்கைக்கு நிகராக எந்த கொள்கையும் சர்ச்சைக்குள்ளாகவில்லை. ஏனென்றால் புனித நூல்கள் எல்லாம் இறைவன் படைத்தாக கூறிய மனிதனை, குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தே மனிதன் தோன்றினான் என்று அறிவுடையவர்கள் கூறினார்கள் என்றால், அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்வார்களா முட்டாள்கள். ஏற்கவில்லை, இன்று கூட இதனை ஏற்காமல் இறைவன் களிமண்ணால் செய்தான் என்று நம்பிக்கொண்டிருக்கும் மடையர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் அடைந்தான் எனும் அறிவியலை ஏற்காதவர்களை, குரான் வேறுமாதிரி குரங்குடன் சம்மந்தம் செய்கிறது. அந்த வசனத்தினை கீழே காணுங்கள்.
உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி “சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.
– குரான் 2:65
இறைவன் மனிதர்களை குரங்குகளாக மாறிவிடுங்கள் என்றால், உடனே மனிதர்கள் குரங்குகளாக ஆகிவிடுவார்களாம். ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினமாக மாறுவதற்கான காலம் பலகோடி ஆயிரம் ஆண்டுகள், படிப்படியாக மாற்றம் அடைந்து மனிதனாக மாறிய குரங்குகளை, மீண்டும் குரங்காகவே மாற்றுதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் படிக்கும். உள்ளோடுங்கிய மனித தாடையின் எழும்புகள், மீண்டும் வெளிநீட்ட வேண்டும், ரோமங்கள் குறைந்துபோன உடல் ரோமங்களை அதிகமாக்கி கொள்ளவேண்டும். சிந்திக்கும் திறன் மெல்ல குறைந்து குரங்கின் சிந்தனைக்கு தக்கவாறு மாற வேண்டும். உடையைப் பற்றி கவலைகளை மறக்கவேண்டும். உடல் அளவிலும், உறுப்புகள் அளவிலும் நிகழும் மாற்றங்களை நொடி பொழுதில் செய்து விட இயலுமா?.
குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதை அறிவியல் சொல்கிறது. படிநிலையில் அடுத்த அடுத்த படிநிலைகளை எட்டும் வளர்ச்சியை விவரிக்கிறது. அதற்கான ஆதாரங்களையும் தருகிறது. ஆனால் குரான் பரிணாம கொள்கையில் பின்னோக்கி செல்லும் மதநூலாக உள்ளது. மனிதனை குரங்காக மாற்றியதாக கதைவிடுகிறது. அதனால்தான் அறிவுடையவர்கள் குரானின் தவறுகளை கண்டு எள்ளி நகைக்கின்றார்கள். குரான் தவறானது என்று மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்கள். பொய்யான தகவல்களை மனிதனுக்கு பரப்பிவிடுவதை வெறுக்கின்றார்கள்.
மனிதனை குரங்காகவும், நாயாகவும், பறவையாகவும் மாற்றும் சிறுபிள்ளை கதைகளை வளர்ந்த மனிதர்களும் நம்பிக் கொண்டுள்ளார்கள். விஞ்ஞானத்திற்கு எதிரான அஞ்ஞான கொள்கைகள் நிறைந்த குரானை நாளைய தலைமுறை நிச்சயம் புறக்கணிக்கும் என்பதி்ல் ஐயமில்லை. என் சிற்றறிவுக்கு எட்டும் குரானின் முட்டாள் தனங்கள், பரிணாமத்தினால் நாளைய பெரும் அறிவு படைத்தாக வரப்போகும் தலைமுறையின் சிறந்த நகைச்சுவை நூலக வேண்டுமானால் இருக்கலாம். மனிதனை நாயாக மாற்றிவிடுவதாக வரும் விட்டலாச்சாரிய கதைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கும் முகமது நபியின் கதைகளை படித்து நகைபுரிவோம்.
– தோழர் சாத்தான்